காஞ்சியின் கடைசி வீதியும் தாண்டி போதி குடில்கள் தாண்டி அந்த இளம் துறவியின் பின் பல்லவன் புதல்வன் நாய் தன் எஜமனாணன் பின் கேள்வி கேட்காமல் நடப்பது போல் நடந்தான். வீரர்கள் வியந்தனர் – பின் தொடர்ந்தனர்.
ஒரு போதி குடில். உள்ளே இளம் துறவி நுழைந்தான். பல்லவன் புதல்வன் உள்ளே நுழைய எத்தனிக்கவும் – சைகையால் – “அனுமதி இல்லை உனக்கு” என்றான் துறவி.
வாய் மூடி மௌன மொழி பேசி தலை குனிந்து நின்றான் பல்லவன் புதல்வன். உள்ளுக்குள் இருந்து நறுமணம் வீசியது. உள்ளே இருந்த துறவியிடம் இளம் துறவி ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் முதுகதான் தெரிந்தது பல்லவனுக்கு.
சாம்பிராணி புகை உள்ளே இருந்து வந்தது. முனிவர் எழுந்தார். திரும்பினார்.
“சித்தப்பா” – பல்லவன் புதல்வன் ஆச்சர்யபட்டான்.
“அட! புத்தி தார பல்லவன் உயிருடன் உள்ளாரா ?” – வீரர்கள் வியந்தனர்.
இன்னும் உடல் வனப்பு குறையவில்லை புத்தி தார பல்லவனுக்கு ஆனால் – தெய்விகம் கூடி இருந்தது. மொட்டை போட்டிருந்தார். காவி அம்சமாய்
பொருந்தி இருந்தது புத்தி தாரருக்கு.
“பல்லவர் இளவரசே. உள்ளே வாருங்கள்” – புத்தி தார பல்லவர் அழைத்தார்.
“சொல்லுங்கள் சித்தப்பா” – பல்லவன் புதல்வன் உள்ளே நுழைந்தான்.
“நான் பந்தம் அறுத்தவன் – என்னை சித்தப்பன் என்று அழைக்காதே” -புத்தி தரர் சொன்னார்
“அப்படி என்றால் ?”
“என் தீட்சை பெயர் – தர்மன். தர்மர் என்று நீ கூப்பிடலாம்”
“சரி”
“நீ துறவிகளை விரட்டிநாயா ?”
“அது வந்து சித்தப்பா … ” பல்லை கடித்தான் இளவரசன்.
“என்னை துரத்த வேண்டிய நிலை உனக்கு இல்லை. நான் இந்த மண்ணை விட்டு பயணிக்கிறேன். வருகிற பிரசன்னா தாரரின் 67 ஆம் பிறந்தநாளில்”
“இந்த வயதில்”
“முதுமை என் எண்ணத்தில் உள்ளது. உடல் இன்னும் இரும்பே”
“பாதுகாப்பு”
“வேண்டியது இல்லை”
“சோழர்கள் ?”
“அவர்களிடம் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை”
“வந்தாலும் நான் காப்பேன் தர்மரே”
“தேவை இல்லை. என் பயணம் புத்தம் வளர்க்கும். தமிழ் மண்ணில் புத்தம் அழியலாம். ஆனால் -உலகிற்கான புத்தம் தமிழ் மண்ணில் இருந்தே பயணிக்கும்” – தர்மர் தீர்மானத்துடன் சொன்னார்.
இளவரசன் வீரர்களை அழைத்துக்கொண்டு திரும்பினான். மாலை மயங்கியது. நிலவு உச்சிக்கு வந்தது. தர்மரின் பயணத்திற்கு தடை செய்ய ஒரு கூட்டம் தயாரானது.
தர்மர் அன்று தன் பயணத்தை தொடங்கினார். ஆனால் அவர் பயணம் ….?
தொடரும்
கார்த்திக்.. நீங்கள் எழுதும் இந்த கதைக்கு ஏதேனும் சரித்திர பின்னணி உள்ளதா? இல்லை கற்பனையா?..
அதை சொல்லிவிட்டால் நீங்கள் படிக்கமாட்டீர்களே…! தொடர்ந்து படியுங்கள்!
[...] மேலும் 0 கருத்து | ஏப்ரல் 3rd, 2010 at 5:11 am under Blog திரட்டி [...]