விழித்து பார்த்தார் தர்மர். அருகனும்தான். புள்ளங்குளைளின் ஓசை இந்த கோடலியால் நிருத்தப்படிருந்தது. ஒரு திடகத்ரமான வீரன் வந்தான்.
“அட! கலரி வளரி எல்லாம் தெரியாது” – கோடலியை எடுத்தவரே கேட்டான்.
“இல்லை! வர்மம் மட்டும் தெரியும்” – தர்மர் சொன்னார்.
“ஒ! வர்மரா ?” – கோடலிக்காரன் கேட்டான்
“ஆம்”
“நீங்கள் சிலம்பம் கலரி வளரி எல்லாம் கற்றால் நல்லது”
“நிச்சயமாக” – தர்மர் சொன்னார்.
“அப்புறம் விழித்திருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்” – சொல்லி விட்டு பதிலுக்கு காத்திருக்காமல் போய் விட்டான் அந்த நடுத்தர வயது கோடாலி மனிதன்.
முகத்தில் அடி விழுந்த மாதிரி இருந்தது தர்மருக்கு. பின்னர் புத்தம் என்றாலே விழிப்பு என்று பொருள். இவன் அதிலேயே கை வைத்து விட்டு போகிறான்.
பரசு – அப்படிதான் சேரமண்ணில் இந்த சமயத்தில் அழைக்கிறார்கள். அருகன் தர்மரின் அருகில் வந்தான்.
“பரசு உங்களை ஒன்றும் செய்யவில்லையே ?” – அருகன் கேட்டான்.
“இல்லை”
“அது என்ன கலரி வளரி ?”
“அது எல்லாம் தற்காப்பு கலைகள்”
“கற்கவேண்டும்”
“யாரிடம் ?”
“பரசு மனிதனிடம். அவர் என் குரு”
அருகன் தரமரை பார்க்க … மழை தூர ஆரம்பித்தது. அவர்கள் ஓடினர். தங்கள் வண்டிக்குள் பதுங்கி கொண்டனர். அவர்களை சேரநாடு வரை வந்து விட்ட மணிதான் – உத்தரவு வாங்கி கொண்டு சென்றான். அவனை இந்த பரசு மனிதன் தான் அனுப்பி உள்ளான்.
மழையையும் பொருட்படுத்தாது அந்த பரசு மனிதன் மரம் வெட்டிக்கொண்டிருந்தான். மழை விட்டது. அவன் விரகுகளுடன் வந்தான். இவர்கள் வண்டியில் இருந்தனர். தரமரை பார்த்தான். வாருங்கள் என்னோடு என்று சைகை செய்தான்.
அவன் குடிசைக்குள் போயினர். போகிற வழியில் அவர்கள் கருங்குரங்கு குகைக்குள் இருப்பதை பார்த்தனர். சிங்கத்தின் கால் தடங்களும் இருந்ந்தன.
விறகை வைத்தான். தன் மேல் துண்டால் தன் உடல் துடைத்து கொண்டான்.
“கலரி” – தர்மர் ஆரம்பித்தார்.
“அதெல்லாம் இருக்கட்டும். முதலில் விழிப்பை கற்றுக்கொள்ளுங்கள்” – பரசு சொன்னான்.
“நான் …” – தர்மர் இழுத்தார்.
“புத்தனோ ?”
” ஆம்”
“அட! கொடுமையே! பின்னல் இருந்து கோடாலி விழுவது கூட தெரியாமல் தினம் செய்கிறாய். நீ புத்தனோ ?” – பலமாய் சிரித்தான் பரசு.
அருகனுக்கு கோபம் வந்தது.என்னடா இது புத்தனிடமே புத்தம் பேசுகிறான். யார் இவன்? சரியான திமிர் பிடித்தவனோ? அருகன் மனதுக்குள் கோபபட்டான்.
‘யார் இவன் ?’ – தர்மர் விழித்தார். இயற்க்கை ஒரு குருவை சீடனாக்கும் முயற்ச்சியில் இடுபட்டு உள்ளது. நல்லதே நடக்கட்டும்.
“என்ன புத்தம் சொல்லித்தரவா ?” – பரசு கேட்டான்.
புத்தம் சரணம்!
தொடரும்
[...] மேலும் 0 கருத்து | ஏப்ரல் 8th, 2010 at 5:53 am under Blog திரட்டி [...]