இளவேனில் காலம் அது. சேர நாட்டின் பச்சை நிறமும் மலை நிலமும் மனதில் இதமான காற்றை வீசின.
கலரி வளரி சிலம்பம் என்று தர்மர் எல்லாம் கற்க , பெல்பகம் செல்லும் அவர்களின் திட்டமும் தீவிர முனைப்பில் முன்னெடுக்க பட்டன.
பெலம்பகம் – கடல் தாண்டி அடைவதே சரி என்று அவர்கள் திட்டம் தீட்டினர். பெலம்பகத்தின் மலையுருக்கு இங்கே இருந்து கப்பலில் வணிகர்கள் செல்வர். அவர்களுடன் மரம் ஏறும் தொழில் செய்யும் சிலரும் செல்வர். அவர்களே பல தருணங்களில் பாதுகாவலர்கள். தமிழகத்தின் அந்நாட்களில் வர்த்தகர்கள் தங்களுக்கு என படை வைத்துகொள்வது நடை முறையில் இருந்தது.
பாறையில் கடல் அலை வந்து மோதியது.
“தர்மரே ! கடலை பார்த்து அமருங்கள். உங்களுக்கு பின்னால் இருந்து என் பரசை எரிகிறேன். பிடியுங்கள் பார்க்கலாம். இதுவும் ஒரு விழிப்பு”
-பரசு சொன்னான். பரசு என்று அவன் சொன்னது கோடலியை.
எறிந்தான் தர்மர் தெளிவாய் பிடித்தார். பரசு சிரித்தான்.
“நீங்கள் பயணிக்கலாம் தோழரே. புத்தத்தை இனி எவரும் அழிக்க முடியாது” – பரசு சொன்னான்.
“பயணம் எப்போது ?” – அருகன் கேட்டான்.
“அட! நீயா? குரங்கு போல் புலி போல் போரட்ட கட்ற உங்களை நான் ஏன் பிடித்ஹ்டு வைக்க போகிறேன் ? வருகிற அமாவசை அன்று வணிக கப்பலில் கிளம்பி பெலம்பகம் போங்கள்” – பரசு சொன்னான்.
தர்மரும் அருகனும் புலியை குரங்கை பார்த்து அவை எப்படி தங்களை எதிரிகளிடம் இருந்து kaaththukolgnrana என்று கண்டு அறிந்து எல்லாம் கற்றனர்.
அது அவர்களுக்கு மிகவும் உதவும் அதுவும் காடும் கடலும் சார்ந்த இந்த மண்ணில் அவர்களுக்கு மிகவும் தேவை. மலையுறும் இந்த மண் போல தான் இருக்கும் என்று அவர்கள் அறிந்தேஇருந்தனர்.
இருள் படர்ந்தது. நாட்கள் நகர்ந்தன. அமாவாசையும் வந்தது. வர்த்தக கப்பலில் மர தொழிலாளிகளுடன் சேர்ந்து ஏற தயாராக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கேயும் ஒரு பிரச்சனை காத்துகொண்டு இருந்தது.அவர்கள் அதை எதிர் பார்கவில்லை.
தர்மம் சரணம் ஹச்சாமி!
தொடரும்
[...] மேலும் 0 கருத்து | ஏப்ரல் 13th, 2010 at 6:07 am under Blog திரட்டி [...]