சிங்கர்கள் என்கிற பல்லவ வணிகர்களும் அந்த கப்பலில் இருந்தனர். சிங்கர்கள் தலைவனுக்கு சந்தேகம் வலுத்தது. எல்லோரும் மூடையை ஏற்றும் போது அவன் தர்மர் கவனித்தான். தர்மர் லாவகமாக ஒரு தொழிலாளி போலவே மூட்டைகளை ஏற்றி கொண்டு இருந்தார்.
அவர் மூட்டைகளை ஏற்றும் போது ஒரு வணிகன் ஓடி வந்தான்.
“சானனே! உன்னை தலைவர் கூப்பிடுகிறார்”
தன் துண்டினால் தன வியர்வையை துடைத்து கொண்டு வந்தார். துண்டை கக்கத்தில் வைத்து.
“வணக்கம் முதலாளி” – என்றார்.
“நான் சேரநாட்டில் வணிகம் செய்ததாலும். நான் சிங்கர். அதாவது பல்லவ வணிக வகுப்பை சேர்ந்தவன். தங்களை பார்க்கும் போது – எனக்கு தங்களை வேலை வாங்க மனம் வரவில்லை. நீங்கள் புத்தி தார பல்லவரா ?”
“அது”
“புரிகிறது. தங்கள் உயிர் தங்கள் கையில் இல்லை. பெலம்பகத்தில் பல்லவ வட்டேளுதுக்களை ஒட்டியே எழுத்துக்கள் இருக்கும். எனவே உங்களுக்கு யார் உதவியும் தேவை படாது”
“நான் புத்தன்”
“நன்று. என் கேள்விக்கு விடை கிடைத்ததாகவே நான் நினைக்கிறேன்”
“நல்லது” – தர்மர் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்கையில், சிங்கர் குரல் எழுப்பினார்.
“நீங்கள் எங்கே செல்ல வேண்டும் ?”
“பெலம்பகம்”
“நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால். முதலில் நாம் ஸ்ரீ விஜயாவை அடைவோம். பின்பு பெலம்பகம்.
பெலம்பதில் இருந்து நீங்கள் , மஞ்சள் மண்ணுக்கு பயணியுங்கள்”
“மஞ்சன் மண் ?”
“ஆம் புத்தம் அங்கே வாழ்கிறது. வட கிழக்கு சேர மண்ணின் கணவாயை கடந்தால் அது உள்ளது. பெலம்பகத்தில் இருந்து அங்கு பயணிப்பது எளிது”
“நன்றி. எல்லாம் புத்தன் செயல்”
மீண்டும் மூட்டை தூக்க ஓடினார் தர்மர். அருகன் மூட்டையை இறக்க வந்தான்.
“எதுவும் பிரச்சனையா ?” – அருகன் கேட்டான்.
இந்த நேரத்தில் அருகனை புளியோன் என்றே அழைக்க ஆரம்பித்து இருந்தார் பரசு. அதாவது புலி மாதிரி சண்டை இடுபவன் என்று பொருள்.
“இல்லை புலி”
“மகிழ்ச்சி”
“புலி இருக்கையில் தமிழனுக்கு பிரச்சனை இல்லை” – சொல்லி விட்டு தர்மர் சிரித்தார்.
மூட்டை தூக்கும் பணியில் அவர் இடுப்பட்டே இருந்தார்.
கப்பல் கடல் கடந்தது. ஸ்ரீ விஜயாவை நோக்கி பயணம். மலையூர் ஸ்ரீ விஜய அரசின் கீழ் உள்ளது இப்போது. பல சமயங்களில் இந்த ஸ்ரீ விஜய மண் சோழர்களால் வெல்ல பட்டதுண்டு.
பெலம்பகம் என்பது தற்போதைய தாய் லாந்து. தை மொழி பல்லவ வட்டேளுத்துக்களின் செயல் கொண்ட வட்டெழுத்து சார்ந்த மொழி.
ஸ்ரீ விஜய என்பது தற்போதைய மலேசியா. மலையூர் என்பது நில பெயர். ஸ்ரீ விஜய என்பது அரசவம்சத்தின் பெயர்.
கப்பல் கரையை விட்டு கடந்தது. அம்மாவாசை நிலவு (?) வலி அனுப்பி வைத்தது. ஸ்ரீ விஜயாவை அடைந்தனர். பின்னர் பெலம்பகம். ஆனால் அங்கே இருந்து மஞ்சள் மண்ணுக்கு செல்ல வேண்டியது தர்மரின் தனிப்பட்ட பொறுப்பு.
மஞ்சள் மண்ணில் கால் வைக்க அவர் கடினப்பட்டார். ஏற்கனவே மர கட்டையின் உதவியுடோனும் இல்லாமலும் நீரில் நடக்கிற வித்தையை பரசு கத்து கொடுத்திருந்தார். அது தர்மருக்கு கை கொடுத்தது.
ஒரு படகு மஞ்சள் மண்ணின் நதியில் இருந்தது.
“டேய் அந்த ஆளை படகில் எத்தாதே!”
படகில் எரிய ஒருவன் படகோட்டி இடம் சொன்னான்.
“ஏன்”
“அவன் பழுப்பன்”
“அப்படின்னா …?”
“அட! கையிலே குண்டி கழுவுவாணுக கையிலேயே சப்படுவாணுக “
“ஒரே கையிலா ?”
“வேற கையில தான். ஆனா சுத்தம் இல்லாதவனுக. பாரு தாடியோட இருக்கான் பிச்சை காரன் மாதிரி”
தர்மர் மனம் ஒடிந்து போனார். வானை பார்த்தார். தமிழ் நாட்டில் இருந்தாலும் பிரச்சனை. பெலம்பகம், ஸ்ரீ விஜயாவும் பிரச்சனை இல்லாத மண் இல்லை. இங்கேயும்.
புத்தம் சரணம்
அடுத்த பகுதியில் நிறைவு பெறும்: நண்பர்களே இந்த கதை ஒரு வரலற்று உண்மை சார்ந்த ஒன்று. ஆனால் கற்பனை அதிகம் உள்ள ஒன்று.
தர்மர் யார்.எந்த மண்ணில் இவர் தன் பாதுகாப்பான வாழ்வை நடத்தினார் என்பதை முடிவில் சொல்கிறேன்.
தொடரும்
[...] மேலும் 0 கருத்து | ஏப்ரல் 13th, 2010 at 6:07 am under Blog திரட்டி [...]