அது ஒரு சின்ன கிராமம். ஊருக்கு கடைசியில் ரூபனின் வீடு. ரூபனுக்கு எல்லாமே கடைசிதான். வீட்டில் எழுந்திரிப்பதில் அவன் கடைசி. தூங்குவதிலும் கடைசி. சாபிடுவதிலும்.
பள்ளிகூடத்தில் பெஞ்சும் கடைசிதான். இந்த கடைசிக்கு முதலில் இருந்தே தோழன் என்றால் அது கடைசி பெஞ்சு கதிர்தான். அவனும் முதலில் இருந்தே கடைசி தான்.
பள்ளிக்கூடம் ஆரம்பித்தது – கடைசியில் இந்த ரெண்டும் அதான் ரூபனும் கதிரும் வந்ததால். முதலிலியே வெளியே நில்லுங்கள் என்று இங்கிலீஷ் வாத்தியார் சொல்லி விட்டார். முதல் வகுப்பிலிருந்து முதல் பாட வேலையில் வேலையில் நிற்பது வடிக்கயாகவே பொய் விட்டது.
தமிழ் அம்மா தமயந்திதான் “உள்ள வந்து தொலைங்கடா ” – என்று வகுப்புக்குள் இருந்து கொண்டு வெளியில் இருந்து இந்த ரெண்டையும் உள்ளே கூப்பிட்டார்.
வழக்கம் போல கடைசி பெஞ்சில் பொய் உட்கார்ந்து கொண்டன ரெண்டும்.
“… சரி கொடுத்த கொடுத்த வீட்டு வேலைய நாளைக்கு முடிச்சுட்டு வந்திருங்க” – தமிழ் அம்மா சொன்னார்கள்.
“நாளைக்கு லீவு இல்லையா அம்மா” – முதல் பெஞ்சு முந்திரி கொட்டை சண்முகம் எந்திரித்து கேட்டது
“அமா நாளை மறுநாள் வரும்போது முடிச்சு எடுத்துக்கிட்டு வாங்க”
“லீவா ?” – கொஞ்சம் உறக்கமாகவே ரூபன் கேட்டுவிட்டான்.
தமிழ் அம்மா உட்பட வகுப்பே திரும்பி பார்த்தது.
“அமா. காந்தி பொறந்த நாள்” – தமிழ் அம்மா சொன்னார்கள்
“ஒ” – ரூபன் ஒ போட்டான்
“காந்தி யாருன்னு தெரியுமா ?” – தமிழ் அம்மா கேட்டார்கள்
“தெரியுமே. உண்மை பேசியே செத்து போன்றே அவர்தானே ?” – ரூபன் சொன்னான்
“ம்” – கொஞ்சமாய் சிரித்தபடியே இம் கொட்டினார் தமிழ் அம்மா.
பள்ளி முடிஞ்சது. வீடு நோக்கி ரூபனும் கதிரவனும் நடந்தார்கள். அரை கால் காகி டிரவுசர் ஜோல்ன பை வெள்ளை சட்டை. – இதுதான் ரூபனுக்கும் கதிருக்குமான அடையாளங்கள்.
“ஏண்டா உண்மை பேசுறது அவளவு கச்ட்டமாடா ?” ரூபன் கேட்டான்.
“பொய் பெசுரதுவும் தாண்டா” – கதிர் சொன்னான்
“என்னடா சொல்லற உண்மை மட்டுமே பெசுருதுவும் கஷ்டம் பொய் மட்டுமே பெசுரதுவும் கஷ்டம்”
“டேய் ஒரு நாள் பொய் மட்டுமே பேசுவோமா ?” – ரூபன் கேட்டான்.
“கஷ்டம்டா ”
“ஒரு நால்தாநேடா கதிர் ?”
“சரிடா” – கதிரவன் ஒப்புக்கொண்டான்.
அடுத்தநாள். காந்தி பொறந்தநாள்.
எழுந்திரித்தான் ரூபன். சோம்பல் முறித்துக்கொண்டு கிணத்தடிக்கு போனான். அம்மா துவைத்து கொண்டிருந்தாள்.
“துறைக்கு இப்பதான் விடிஞ்சுதா ?”
“ஹ்ம்ம்”
“சரி பல்ல தேச்சுட்டு … சித்தி வீட்டுக்கு போ”
“எதுக்கு”
“எதோ சாமானெல்லாம் எடுத்து ஒதுங்கவைக்கனுமாம். வீட விடவா வச்சிருக்கா”
“சரிம்மா”
“அங்க எதுவும் சாப்பிடாத”
தலையை ஆடிவிட்டு. பள்ள தெயச்சுவிட்டு கிளம்பினான் ரூபன்.
அவன் வாசலை தாண்டியவுடன் வெளில் வந்தால் அம்மா.
“அட! காப்பி கூட குடிக்காம போய்டுச்சு”
சித்தி சுத்த பத்தாம் எல்லாம் கிடையாது. ஆடி அம்மாவசை கிருத்திகை இதுவும் கிடையாது. பிள்ளை குட்டியும் கிடயாது. அம்மா அப்படியே நேரெதிர்.
சித்தப்பா பட்டாளத்தில் வேலை பார்கிறார்.
வாசலில் நின்று பல் விளக்கிகொண்டிருந்தால் சித்தி.
“அட! வா ராசா – உனக்குத்தான் காத்துகிட்டு இருக்கேன்”
வாய் கொப்பளித்து விட்டு உள்ளே அழைத்து சென்றாள்.
“பரண்ல அடுக்கனும் இந்த தகரத்த எல்லாம்”
“சரி சித்தி”
“ஒரு வா காபி குடிச்சுட்டு”
“இல்ல சித்தி”
“நானும் அம்மா மாதிரி தாண்டா” – பாசத்தோடு சொன்னாள் சித்தி.
“வேண்டாம் சித்தி”
“அம்மா திட்டுமாடா ?”
“ஹ்ம்ம்”
“குடிச்சேன்னு சொல்லாத. பொய் சொல்லு” – சித்தி சொன்னாள்.
“வீட்லயே குடிச்சிட்டேன். அதான் வேண்டாம்” – முதல் பொய்யை வெற்றிகரமாக சொன்னான் ரூபன்.
இப்போதான் நேத்து செய்த சத்தியம் ஞாபகம் வந்தது. இன்னைக்கு பொய் மட்டும்தானே பேசணும். ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற மனசில்லை.
“சரிடா உன் இஷ்டம்” – சித்தி பொய் விட்டாள். அவள் காபி குடித்தாள்.
வீடு சுத்தமாச்சு.
“கரி சோறு இருக்கு. ஆனா உங்க வீட்லதான் இன்னைக்கு கிருத்திக விரதம் பிடிபீகளே” – என்றாள் சித்தி.
வீடு நோக்கி நடந்தான்.
அம்மா வீடு எல்லாம் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
“என்னடா காப்பி கூட குடிக்காம ஓடிட்ட?” – அம்மா கேட்டாள்
எதுவும் பேசவில்லை ரூபன்.
“சாப்பிட்டியாடா ?” – அம்மா கேட்டாள்.
பொய் சொல்ல மீண்டும் ஒரு சந்தர்ப்பம். அவன் அவன் வாய திறந்தா பொய் தான் சொல்றான்.
“ஆச்சு”
ரூபன் சொன்னவுடன் – அம்மா ஒரு முறை முறைத்தால்.
“கரி சோறா ? தொரைக்கு அவளவு கொல்லுப்பு ஏறி போச்சா ? இன்னைக்கு மத்தியானம் சோறு இல்ல உனக்கு ”
மதியானமுமா ?
சாயந்தரம்.
வயுறு கொன்று எடுத்தது. வாசலில் வந்து அமர்ந்தான் ரூபன்.
கதிரவன் வந்தான்.
“என்னடா பொய் பேசுனியா ?”
“பொய் பேசுறது ரொம்ப கஷ்டம்டா” – ரூபன் சொன்னான்.
அவனுக்குதானே வலி தெரியும்.
வாய்மையே வெல்லும்.!
குறிப்பு: தலைப்பை தவறாக அர்த்தம் பண்ணி இருந்தால் நான் பொறுப்பல்ல!