சிறு கதை : அஞ்சலில் படித்த சித்தப்பாவும் கெஞ்சலில் பெரிய ரூபனும்!

இரவு நேரம் அது. அப்பா அப்போதுதான் வீடு வந்திருந்தார். அம்மா அப்பாவிற்கு தோசை வார்த்து தந்து கொண்டிருந்தாள்.
ரூபன் மௌனமாய் டிவி பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன தங்கம் சமத்தா இருக்க” – வாயில் ஒரு தோசையை பிட்டு போட்டுவாறே அப்பா கேட்டார்.
“ஒன்னுமில்லப்பா” – ரூபன் சமாளித்தான்
“அட! கேள்வி எதுவும் இல்லையா என் ரூபனுக்கு ?” – அப்பா சீண்டினார்.
“அப்பா! சித்தப்பா ஏனப்பா வீட்ல இருந்தே படிச்சாரு ?”
“அதுவா ரூபன், சித்தப்பா வேலை பாத்துக்கிட்டே படிச்சாரு இல்லையா ? அதான் அவர் வீட்ல இருந்த படியே படிச்சாரு ?”
“அப்ப நான் மட்டும் ஏனப்பா ஸ்கூல் போய் படிக்கணும் ?”

தண்ணீரை அப்பா குடித்துகொண்டார். நல்ல கதையாக உள்ளதே – ரூபன் பள்ளி கூடாத விட்டு நிக்க கேக்குற கேள்வி மாதிரி இல்லையா இருக்கு ?

“ரூபன் – ஒரு நெலமைக்கு வந்தப்புறம் வேற வழியே இல்லைனா சித்தப்பா மத்திரி படிக்கலாம்”
“அது என்னப்பா ஒரு நெலமை ?”
“அதுவா ? பள்ளிக்கூடத்துக்கு போனா பாடம் மட்டும் இல்ல ஒழுக்கத்தையும் கத்துக்கலாம்”
“ஒழுக்கம்னா ?”
“சப்பிடருதுக்கு முன்னாடியும் பின்னாடியும் காய் கழுவுறது. நல்ல வார்த்த பேசுறது. நல்லது செய்றது. பெரியவுங்கள மதிக்கிறது. சரியாய் uniform போட்டு பொருது … ”
“டிச்சிப்ளினாப்பா ?”
“ஆமா”
“அப்ப – ஒழுக்கும் பெருசா? படிப்பு பெருசாப்பா ?”
“ஒழுக்கும்தான்”

அப்பாவை ஒரு முறை உற்று பார்த்துவிட்டு ரூமுக்குள் ஓடிப்போய் தன் ப்ரோக்ரேச்ஸ் ரிப்போர்ட் கார்டை எடுத்து வந்தான்.
அதில் கணக்கில் ரூபன் முட்டையும் ஒழுக்கத்தில் 100 மதிப்பெண்ணும் வாங்கி இருந்தான்.

“அடுத்த தடவ கணக்குலயும் 100 எடுப்பென்ப்பா ” என்று ரூபன் சிணுங்கினான்.

அபபா பெருமையோடு பார்த்தார். ரூபன் அடுத்த முறை கட்டாயம் கணக்கில் 100 எடுப்பன்.

சிறுகதை: பார்வதி பாட்டி

ரூபனின் வீட்டிற்கு மிக பக்கத்தில்தான் பார்வதி பாட்டி வீடு. பார்வதி பாட்டி அறுபது வயது பாட்டி.

பார்வதி பாட்டியின் பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை பார்கிறார்கள். பார்வதி பாட்டியின் பல்லில் பாதி தங்கம். அவரை கடத்திப்போனால் நிறைய லாபம்.
பாட்டியை அமெரிக்க பாட்டி என்று செல்லமாக கூப்பிட்டாலும் அமெரிக்க மகன்கள் எவ்வளவு தராங்களோ தெரியாது.

பார்வதி பாட்டி உடம்பு அடிக்கடி வைத்தியம் கேட்க்கும்.
“வயசாயிடுச்சுல …. அதான்” – என்பதுதான் பாட்டியின் பஞ்ச் டயலாக்

ஒரு நாள் காலையில் ஆம்புலன்ஸ் வந்தது. அம்மா அப்பா அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் ஓடி வந்தனர். பாட்டி மருத்தவமனையில் சேர்க்கபட்டார்.

பாட்டி மருத்துவமனையில் ஒரு வார்டுக்குள் சேர்க்கப்பட்டார். மருத்துவமனை பரபரப்பானது.

அப்பா, கதிரின் அப்பா, ரூபன் எல்லோரும் வெளியில் காத்து இருந்தனர்.

“ஆள் இல்லாத வீடு இல்லையா ? அதான் நெஞ்சு வலி வந்திருக்கு அந்த நேரத்தில வேலைக்காரியும் இல்ல …. பாவம் …” – அப்பா சொன்னார்
“இதுக்குதான் முதியோர் இல்லதுள்ள செர்க்கனுமுங்கிறது “– கதிரின் அப்பா சொன்னார்.
“அப்பா முதியோர் இல்லம்னா …?” – ரூபா கேட்டான்
“பெரியவங்க …. hostel ” – அப்பா சொன்னார்
“ஏம்பா அங்க சேக்கணும் … ?” – மீண்டும் ரூபன்
“பாத்துக்க ஆள் இல்லையல ?” – அப்பா சொன்னார்
“அப்பா பாத்துக்கா ஆள் போடலாம் இல்லையா ?”
“அதுக்கு வேலை காரங்க இருந்தாலும் ….”
“அவுங்க புள்ளைங்க வந்து பாத்துக்க மாட்டாங்களா ?”- மீண்டும் ரூபன்
“பாத்துக்கணும் …”
“நான் உன்ன பாத்துக்குவேன்ப்பா … அமெரிக்க எல்லாம் போக மாட்டேன் ” – ரூபன் சொன்னான்

ரூபனின் அப்பா கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. கட்டி அணைத்துக்கொண்டார்.

குறிப்பு: அமெரிக்கா பாட்டி நலமாடைந்துவிட்டதாக பின்னர் சேதி வந்தது.

சிறுகதை: தாத்தாவும் மோட்டார் வண்டியும்

ராமசாமி தாத்தா – ரூபனின் வீட்டில் இருந்து ஒரு ரெண்டு தெரு தள்ளி குடி இருக்கிறார். அப்பாவின் அப்பா அவர்.

எப்போதாவது ரூபனின் வீட்டுக்கு வருவதும் கதை பேசுவதுவுமாய் இருப்பார்.

அன்றும் அப்படிதான் வந்தார் தாத்தா. நீண்ட நேரம் பேசிவிட்டு கிளம்பினார்.

“வர்றேன்” – தாத்தா கிளம்ப தயார் ஆனார்.
“சரிங்க” – அம்மாவும் அப்பாவும் சொல்லினர். வாசல் வரை வந்து வழி அனுப்பினர்.

அவர் கிளம்பினார். கிளம்புவதற்கு முன் வீட்டு முன் நின்ற அப்பாவின் மோட்டார் பைக்கை பார்த்தார். ஒரு நிமிடம் அதன் மீது அவரது கண்கள் இருந்தது.

தாத்தா கிளம்பியவுடன் அம்மா வெளியில் கிளம்பினாள்.

“என்னங்க … நான் சந்தைக்கு கிளம்புறேன்” – அம்மா சொன்னார்கள்.
“இரு … நான் கொண்டு வந்து வண்டியில் விடுறேன்” – அப்பா சொன்னார்.
“ஏம்பா … அம்மாவை வண்டில விடுறீங்க … ?” — ரூபன் கேட்டான்
“அம்மாவுக்கு கால் வலிக்கும் இல்ல ?” – அப்பா சொன்னார்
“அப்பா தாத்தாவுக்கு ?” – ரூபன் கேட்கவும், அப்பா மௌனமானார்.

அம்மாவும் அப்பாவுக்கும் சந்தைக்கு போயினர்.

பள்ளிக்கூடம் முடிஞ்சு வருகிற போது ரூபன் தாத்தா வீட்டுக்கு போனான். தாதா ஏதோ விளங்காத அரட்டை தொடர் பார்த்த்கொண்டிருந்தார்.

“தாத்தா …” – ரூபன் கூவியபடியே உள்ளே ஓடினான்.
“வாடா செல்லம் …” – தாதா வரவேற்றார்
“தாதா உனக்கு கால் வலிக்காதா ?” – ரூபன் கேட்டான்
“ஏன்டா ?”
“அப்பா உன்ன வண்டில விடலையே …”
“ஆமா … எனக்கு கால் வலிக்காது. நெறைய நடப்பேன் நான் சின்னவசுலையே … அதான் திடமா இருக்கேன்”
“அப்படியா .. ?”
“ஆமா … நீயும் நெறய நட… நெறைய வளைஞ்சு நிமிந்து வேல செய்”
“சரி” – சொல்லி விட்டு ரூபன் வீட்டுக்கு ஓடினான்.

இப்போது அவன் அம்மா அப்பாவையும் நிறைய நடக்க விடுகிறான். அவனும் நடக்கிறான்.

“பேசாம இதுக்கு அன்னைக்கு அவர வண்டில கொண்டு போய் விட்டிருக்கலாம்” – அம்மா சலித்துகொண்டால் அப்பா சொல்கிறார் “எல்லாம் நல்லதுக்குதான்”

அம்மா நடப்பதில் அவருக்கு சந்தோசமோ ?

சிறுகதை: சித்தியும் சித்தப்பாவும்

‘ரூபனிடம் உனக்கு பிடிச்சவங்க யார் ?’ என்று கேட்டால் நிச்சயமா லதாக்கவின் பெயரும் இருக்கும். லதா அவனை பொறுத்தவரை மிக நல்லவள். அம்மாவை விட அப்பாவை விட காரணம் அவள் இந்திய கிரிகெட் அணி மாதிரி – அடிக்கவே மாட்டாள்.

லதா மீண்டும் ஊருக்கு வந்திருக்கிறாள். அது என்ன மீண்டும் என்று கேட்கிறீர்களா ? அவள் கல்யாணத்திற்கு பின் இபொழுதுதான் வருகிறாள்.

லதாவை பார்பதற்காக பள்ளி முடித்து வந்ததுமே ஓட்டமும் நடையுமாய் லதாவின் வீடு நோக்கி போனான்.

“அட! கால் முகம் கூட கழுவாம ஓடிருச்சு பக்கி ” – என்று அம்மா சிணுங்கினாள்.

லதாவின் வீடு அமைதியாய் இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தான் ரூபன்.

“அக்கா ” – என்று தான் கூப்பிட்டான்.
லதாவின் அம்மா வந்தார்கள்.
“அக்காவிற்கு தலை வலி நாளை வா விளையாடுவா” என்றார்கள்.

கொஞ்சம் குழம்பியவனாகவே கிளம்பினான் ரூபன்.

வீட்டிற்கு வந்தால் அம்மாவும் அப்பாவும் சண்டை பிடிதுக்கொண்டிருந்தார்கள்.
“நீங்க இப்படியே செஞ்சா நான் லதா மாதிரி விவாகரத்து பண்ணிருவேன் ” – இது அம்மா சொன்ன வார்த்தை. பல வார்த்தைகளில் ஒன்று என்றாலும் ‘விவாகரத்து’ என்கிற வார்த்தை ரூபனுக்கு நெஞ்சில் பட்டது.

அடுத்த நாள். பள்ளி முடிந்து கடைசி பெஞ்சு கதிரோடு வருகிற வழியில் ஆரம்பித்தான் ரூபன்.

“டேய் கதிர் அது என்னடா விவாகரத்து ?”
“அதுவாடா ரூபா ! இப்ப உங்க அப்பா விவாகரத்து பண்ணிட்டா – உங்க வீட்ட விட்டு உங்க அம்மா போயிடும் அப்புறம் ஒரு சித்தி வரும் – கொடுமை படுத்தும்”
“அம்மா பண்ணினா ….? ”
“ஒரு சித்தப்பா வரும்”

வீட்டுக்குள் வந்தான் ரூபன். பையை நாற்காலியில் போட்டான். கால் முகம் கழுவினான்.
பொய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். தமிழ் புத்தகத்தை எடுத்து கையில் வைத்து கொண்டான்.

“அம்மா கோயிலுக்கு பொய் வரேண்டா ” — அம்மா சொல்லிவிட்டு கோயிலுக்கு கிளம்பினாள்.

அப்பா வந்தார்.
“என்னடா படிக்கிறியா ?” -என்று கேட்டார்.

அம்மா கோயில் முடித்து வந்தாள்
“இந்தாங்க திருநீறு” – அப்பாவுக்கு தந்தாள்.
“டேய் இங்க வாடா ” — ரூபனை நோக்கி அழைத்தாள்

ரூபன் வந்தான்.அம்மா நெற்றியில் திருநீறு இட்டாள்.
“அம்மா நீ என்ன விட்டு போக மாட்டியே ?” – ரூபன் கொஞ்சம் அழுதபடியே கேட்டான்.
“ஏன்டா அப்படி கேக்குற ?” -அம்மா கேட்டாள்
“நீயும் லதா அக்கா மாதிரி …” ரூபன் இழுத்தான்.
பனியனுடனும் கைலியுடனும் இருந்த அப்பா வந்தார்.

ரூபனை இழுத்து அனைத்து கொண்டார்.
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது செல்லம்” – என்றார் அப்பா
“அம்மாண்டா ” – அம்மா சமாதானபடுத்தினாள்.
“புள்ள இருக்கேல அப்படி பேசாதுன்னு கேட்டதனே. நாம்தானே நம்ம புள்ளைக்கு எல்லாம். பாரு ஏங்கி போச்சு” – என்று அப்பா சொன்னார்.

ரூபன் அழுத விழிகளை தொடைத்து கொண்டான்.
அவனுக்குள் மகிழ்ச்சி – நோ சித்தி நோ சித்தப்பா. நன்றி கடவுளே.

குட்டி கதை : காந்தி பிறந்தநாள்


அது ஒரு சின்ன கிராமம். ஊருக்கு கடைசியில் ரூபனின் வீடு. ரூபனுக்கு எல்லாமே கடைசிதான். வீட்டில் எழுந்திரிப்பதில் அவன் கடைசி. தூங்குவதிலும் கடைசி. சாபிடுவதிலும்.

பள்ளிகூடத்தில் பெஞ்சும் கடைசிதான். இந்த கடைசிக்கு முதலில் இருந்தே தோழன் என்றால் அது கடைசி பெஞ்சு கதிர்தான். அவனும் முதலில் இருந்தே கடைசி தான்.

பள்ளிக்கூடம் ஆரம்பித்தது – கடைசியில் இந்த ரெண்டும் அதான் ரூபனும் கதிரும் வந்ததால். முதலிலியே வெளியே நில்லுங்கள் என்று இங்கிலீஷ் வாத்தியார் சொல்லி விட்டார். முதல் வகுப்பிலிருந்து முதல் பாட வேலையில் வேலையில் நிற்பது வடிக்கயாகவே பொய் விட்டது.

தமிழ் அம்மா தமயந்திதான் “உள்ள வந்து தொலைங்கடா ” – என்று வகுப்புக்குள் இருந்து கொண்டு வெளியில் இருந்து இந்த ரெண்டையும் உள்ளே கூப்பிட்டார்.

வழக்கம் போல கடைசி பெஞ்சில் பொய் உட்கார்ந்து கொண்டன ரெண்டும்.

“… சரி கொடுத்த கொடுத்த வீட்டு வேலைய நாளைக்கு முடிச்சுட்டு வந்திருங்க” – தமிழ் அம்மா சொன்னார்கள்.
“நாளைக்கு லீவு இல்லையா அம்மா” – முதல் பெஞ்சு முந்திரி கொட்டை சண்முகம் எந்திரித்து கேட்டது
“அமா நாளை மறுநாள் வரும்போது முடிச்சு எடுத்துக்கிட்டு வாங்க”

“லீவா ?” – கொஞ்சம் உறக்கமாகவே ரூபன் கேட்டுவிட்டான்.

தமிழ் அம்மா உட்பட வகுப்பே திரும்பி பார்த்தது.
“அமா. காந்தி பொறந்த நாள்” – தமிழ் அம்மா சொன்னார்கள்
“ஒ” – ரூபன் ஒ போட்டான்
“காந்தி யாருன்னு தெரியுமா ?” – தமிழ் அம்மா கேட்டார்கள்
“தெரியுமே. உண்மை பேசியே செத்து போன்றே அவர்தானே ?” – ரூபன் சொன்னான்
“ம்” – கொஞ்சமாய் சிரித்தபடியே இம் கொட்டினார் தமிழ் அம்மா.

பள்ளி முடிஞ்சது. வீடு நோக்கி ரூபனும் கதிரவனும் நடந்தார்கள். அரை கால் காகி டிரவுசர் ஜோல்ன பை வெள்ளை சட்டை. – இதுதான் ரூபனுக்கும் கதிருக்குமான அடையாளங்கள்.
“ஏண்டா உண்மை பேசுறது அவளவு கச்ட்டமாடா ?” ரூபன் கேட்டான்.
“பொய் பெசுரதுவும் தாண்டா” – கதிர் சொன்னான்
“என்னடா சொல்லற உண்மை மட்டுமே பெசுருதுவும் கஷ்டம் பொய் மட்டுமே பெசுரதுவும் கஷ்டம்”
“டேய் ஒரு நாள் பொய் மட்டுமே பேசுவோமா ?” – ரூபன் கேட்டான்.
“கஷ்டம்டா ”
“ஒரு நால்தாநேடா கதிர் ?”
“சரிடா” – கதிரவன் ஒப்புக்கொண்டான்.

அடுத்தநாள். காந்தி பொறந்தநாள்.

எழுந்திரித்தான் ரூபன். சோம்பல் முறித்துக்கொண்டு கிணத்தடிக்கு போனான். அம்மா துவைத்து கொண்டிருந்தாள்.
“துறைக்கு இப்பதான் விடிஞ்சுதா ?”
“ஹ்ம்ம்”
“சரி பல்ல தேச்சுட்டு … சித்தி வீட்டுக்கு போ”
“எதுக்கு”
“எதோ சாமானெல்லாம் எடுத்து ஒதுங்கவைக்கனுமாம். வீட விடவா வச்சிருக்கா”
“சரிம்மா”
“அங்க எதுவும் சாப்பிடாத”
தலையை ஆடிவிட்டு. பள்ள தெயச்சுவிட்டு கிளம்பினான் ரூபன்.

அவன் வாசலை தாண்டியவுடன் வெளில் வந்தால் அம்மா.
“அட! காப்பி கூட குடிக்காம போய்டுச்சு”

சித்தி சுத்த பத்தாம் எல்லாம் கிடையாது. ஆடி அம்மாவசை கிருத்திகை இதுவும் கிடையாது. பிள்ளை குட்டியும் கிடயாது. அம்மா அப்படியே நேரெதிர்.
சித்தப்பா பட்டாளத்தில் வேலை பார்கிறார்.

வாசலில் நின்று பல் விளக்கிகொண்டிருந்தால் சித்தி.
“அட! வா ராசா – உனக்குத்தான் காத்துகிட்டு இருக்கேன்”

வாய் கொப்பளித்து விட்டு உள்ளே அழைத்து சென்றாள்.
“பரண்ல அடுக்கனும் இந்த தகரத்த எல்லாம்”
“சரி சித்தி”
“ஒரு வா காபி குடிச்சுட்டு”
“இல்ல சித்தி”
“நானும் அம்மா மாதிரி தாண்டா” – பாசத்தோடு சொன்னாள் சித்தி.
“வேண்டாம் சித்தி”
“அம்மா திட்டுமாடா ?”
“ஹ்ம்ம்”
“குடிச்சேன்னு சொல்லாத. பொய் சொல்லு” – சித்தி சொன்னாள்.
“வீட்லயே குடிச்சிட்டேன். அதான் வேண்டாம்” – முதல் பொய்யை வெற்றிகரமாக சொன்னான் ரூபன்.

இப்போதான் நேத்து செய்த சத்தியம் ஞாபகம் வந்தது. இன்னைக்கு பொய் மட்டும்தானே பேசணும். ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற மனசில்லை.

“சரிடா உன் இஷ்டம்” – சித்தி பொய் விட்டாள். அவள் காபி குடித்தாள்.

வீடு சுத்தமாச்சு.
“கரி சோறு இருக்கு. ஆனா உங்க வீட்லதான் இன்னைக்கு கிருத்திக விரதம் பிடிபீகளே” – என்றாள் சித்தி.

வீடு நோக்கி நடந்தான்.
அம்மா வீடு எல்லாம் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

“என்னடா காப்பி கூட குடிக்காம ஓடிட்ட?” – அம்மா கேட்டாள்
எதுவும் பேசவில்லை ரூபன்.
“சாப்பிட்டியாடா ?” – அம்மா கேட்டாள்.
பொய் சொல்ல மீண்டும் ஒரு சந்தர்ப்பம். அவன் அவன் வாய திறந்தா பொய் தான் சொல்றான்.
“ஆச்சு”

ரூபன் சொன்னவுடன் – அம்மா ஒரு முறை முறைத்தால்.
“கரி சோறா ? தொரைக்கு அவளவு கொல்லுப்பு ஏறி போச்சா ? இன்னைக்கு மத்தியானம் சோறு இல்ல உனக்கு ”

மதியானமுமா ?

சாயந்தரம்.
வயுறு கொன்று எடுத்தது. வாசலில் வந்து அமர்ந்தான் ரூபன்.

கதிரவன் வந்தான்.
“என்னடா பொய் பேசுனியா ?”
“பொய் பேசுறது ரொம்ப கஷ்டம்டா” – ரூபன் சொன்னான்.

அவனுக்குதானே வலி தெரியும்.
வாய்மையே வெல்லும்.!

குறிப்பு: தலைப்பை தவறாக அர்த்தம் பண்ணி இருந்தால் நான் பொறுப்பல்ல!

அப்பாவும் நானும் 6 : கண் விழித்து பார்த்த நேரம்!

அந்த அதிசயம் நடந்தே விட்டது.

“எடுடா கைய்ய … ” அதட்டலாய் ஒரு குரல். மிகவும் பழகிய குரல். பார்த்தால், அப்பா என்னை பார்த்துகொண்டிருக்கிறார்.
“அப்பா….” – நான் மகிழ்ச்சியில் என் விழியையும் வாயையும் அகல திறந்தேன்.
“யாருடா பொண்ணு ?”
“அது வந்து …. ”

நான் ஆரம்பிக்கவும் அன்னம் போன்ற தேவதை – என் லலிதா வேகமாக வார்டை விட்டு வெளியே ஓடினாள். வெட்கமாய் இருக்கும்.

எனக்கே ஒரு மாதிரி உள்ளது. அவளுக்கு இல்லாமல் இருக்குமா ?

“என்னடா வந்து போயின்னுட்டு ? ஒரு பொண்ணு கைய்ய …பட்ட பகல்ல… நல்ல குடும்பத்தில பொறந்தவனாடா நீ ?” – அப்பா உறுமினார்.
“என்ன மாதாவா எல்லாத்துக்கும் கோபமா ?” – டாக்டர் நீலகண்ட மாமா உள்ளே நுழைந்தார்.கூடவே லலிதா. அவள் டாக்டரை அழைக்க போயிருக்க வேண்டும்.

“ஆமா! நான் இங்க எப்ப வந்தேன் ?” – அப்பா அப்போதுதான் மருத்துவமனையில் உள்ளதை உணர்ந்தார்.
“நீ போன ஆணி மாசமே வந்துட்ட”
“ஒ”
“பொன்னும் அவனும் விரும்புராங்கட”
“நீதான் இதுக்கு காரணமா ?”
“அட! இது என்ன சோதனைட சர்வேஸ்வரா ? நீ வாடா” – என்னை நீலகண்ட மாமா அழைத்தார்.
“அவன எதுக்கு கூப்பிடுற?”
“மாதவா, தனியா கூட்டிட்டு போய் கண்டிகத்தான். வளந்தட்டாநில்லையா ? ”
என்னை வார்டை விட்டு அழைத்து வந்தார் நீலகண்டம்.

“பாத்துக்கம்மா ” என்று லலிதாவிடம் சொல்லிவிட்டுவந்தார்.

அவரது அறைக்கு அழைத்து சென்றார். உட்கார்ந்தார். எனக்கு இருக்கையை காண்பித்தார். எங்கள் இருவருக்கும் இடையில் அவரது மேசை.
கொஞ்சம் யோசித்தார். மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுற்றிவிட்டார்.

“மகாதேவா …” – டாக்டர் ஆரம்பித்தார்.
“மார்க்ஸ் மகாதேவன் …”
“ம் சரி மார்க்ஸ் மகாதேவா, உங்க அப்பன பத்திரமா பாத்துக்கணும். எந்த சோகம் தரும் விசயமும் சொல்லப்படாது. சரியா”
“சரி”
“உங்க அப்பன் காந்தி நேசன். அவன் கிட்ட இந்தியா பிரிஞ்சுடுச்சு! காந்தி செத்து போய்ட்டார் – அப்படி இப்படின்னு தத்து பித்துன்னு உளற கூடாது”
“அப்புறம்”
“இந்தியாவுக்கு விடுதலை கிடைக்க போகுதுன்னு சொல்லு.அவர் இங்கயே இருக்கட்டும். அதான் வசதி திடீர்னு எதாவது ஆச்சுன்னு. அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு” – டாக்டர் முடித்துக்கொண்டார்.
“சரி” – நான் அமோத்திதேன்.

அப்பாவை எப்படியும் பாதுகாக்கணும். என்னால்தான் அவருக்கு இந்த நிலை. அன்று என்னை போலீசார் அடிப்பதை பார்த்திருக்க வேண்டும். அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. பாவம் மயங்கிவர் – இப்போதுதான் தெளிகிறார். என் உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும்.

திரும்பவும் அப்பாவின் அறைக்கு போனோம். அக்காவும் அத்தானும் இருந்தனர். டாக்டர் மாமா ஆள் அனுப்பி செய்தி சொல்லி இருக்க வேண்டும்.

“என்னம்மா அழுதுக்கிட்டு. உசிரோடதனே இருக்கேன்.” – அப்பா அக்காவை தேற்றி கொண்டிருந்தார்.
“டேய்! நீலகண்டம் வீட்டுக்கு போகலாமா ?”- அப்பா கேட்டார்.
“என்ன அவசரம் மாதவா ? கொஞ்ச நாள் இருந்துவிட்டு போறது ?” – டாக்டர் சொன்னார்.
“அட! நீ வேற. எனக்கு என் வீடுதான் சொர்க்கம்” – அப்பா மறுத்தார்.
“அதில்லை. இப்பதான் சரியாய் ஆகிருக்கு. இங்க இருந்தா என்ன ?” – டாக்டர் கொஞ்சமாய் கெஞ்சினார்.
“இல்லடா வேணா ஒரு நர்ஸ அனுப்பிவை” – அப்பா மீண்டும் மறுத்தார்.
“அது இல்லடா …” என்று டாக்டர் இழுத்தார்.

அக்காவும் அத்தானும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
“டாக்டர் – அப்பா வீட்டுக்கு வரட்டும்” – நான் சொன்னேன். டாக்டர் என்னை முறைத்து பார்த்தார்.
“அதெல்லாம் சரி இந்தியாவுக்கு விடுதலை கெடசுடுச்சா ?” – அப்பா கேட்டார்.
“இன்னும் இல்லை. ஆனா எப்படியும் ரெண்டு மூணு மாசத்துல ” – என்றேன் நான்.

அக்கா, அத்தான், லலிதா எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். நான் அவர்களுக்கு ஒரு மாதிரி தெரிந்தேன். அப்பா எனக்கு வேண்டும்!

எப்படித்தான் இந்த பொய்யை காப்பாற்ற போறேனோ ?

பிரிவினை துயர் : மறைக்க வேண்டிய ஒன்று. மறக்க வேண்டிய ஒன்று

பிரிவினை துயர் : மறைக்க வேண்டிய ஒன்று. மறக்க வேண்டிய ஒன்று

அப்பாவும் நானும்: பகுதி 5 – சமாதானத்தின் மரணம்!

மவுண்ட் பேட்டன், நேரு லியாகத் அலி: பிரிட்டிஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான்.

மவுண்ட் பேட்டன், நேரு லியாகத் அலி: பிரிட்டிஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். ஆனால் இந்த தை பிறந்தும் இன்னும் வழி பிறக்கவில்லை.வலிதான் தொடர்ந்தது.

1947 சுதந்திரம் மற்றும் மதக்கலவரங்களோடு நாட் காட்டியில் இருந்து ஓடி மறைந்தது. மதக்கலவரம் இன்னும் தொடர்கிறது. விடுதலையின் விலை பிரிவினையா ?.

காந்தி ஒரு இசுலாமியரின் வீட்டில் இருந்து கொண்டு வங்காளத்தில் அமைதி வேள்வி நடத்தினார். ஒன்றும் வெற்றி பெறவில்லை.

அக்காவின் கோபம் என்னை ஒன்றும் செய்துவிடவில்லை. மருத்துவமனையில் பார்த்த அந்த மாந்தளிர் என் இதயத்துக்குள் சாரலாய் வந்தாள். அந்த தேவதையின் பெயரோ – லலிதா. அவள் கேட்டதோ இதயத்தை தா என்று. தந்துவிடேன்.

அப்பாவுக்கு பிடிக்காதவரின் மகள். ராவ் பகதூர் நீலமேகத்தின் மகள் அவள். ராவ் பகதூர் என்பது ஆங்கில அரசின் விருது. பிரிட்டிஷ் சர்க்கார் தன் மனம் கவர்ந்த இந்தியர்களுக்கு கொடுக்கும் விருது. ராவ் பகதூர் நீலமேகம் வெள்ளைய அடிவருடி.

ஆனால் லலிதா அப்படியில்லை. தன தந்தையின் வெள்ளைய அடி வருடிதனம் பிடிக்காமல் மாமா வீட்டில் வாழ்கிறாள். கடித பரிமாற்றம் எங்களுக்குள் நடந்தது. அவளை பார்க்க வேண்டியே அப்பாவை அடிக்கடி போய் மருத்துவமனையில் பார்த்தேன்.

அப்பாவுக்கு நான் ராவ் பகதூரின் மகளை பார்ப்பது தெரிந்தால், “கழிசடை கழிசடை! என் ஜென்ம விரோதி என் பிள்ளையாய் பிறந்து பிராணன் வாங்குது” என்பார்.

தினமும் காலை தினமணியுடன் ஆரம்பானது. அப்படித்தான் அன்றும் ஆரம்பம் ஆனது.

1948 ஜனவரி 30 – காந்திய சுட்டுடாங்களாம். ரேடியோ முன் ஒரு கூட்டமே உட்கார்ந்து கேட்டது. விடுதலையின் விலை தேசப்பிதாவின் கொலை. சமாதனம் இறந்தது.

சமாதானத்தின் மரணம்: காந்தி இறுதி ஊர்வலம்

சமாதானத்தின் மரணம்: காந்தி இறுதி ஊர்வலம்

தையில் பிறந்த வலி ரணமானது. ஆனால் ஒரு வழி பிறந்தது – மதக்கலவரம் நின்றது. காந்திக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியது இந்தியா கலவரத்தை நிறுத்தியதன் மூலம். அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். நான் லலிதாவின் அன்பில் மயங்கிக் கொண்டிருந்தேன். அத்தானுடன் நூல் கடையில் நேரம் கிடைக்கிற போது உதவியாய் இருந்தேன்.

அன்று ஒரு நாள் – மருத்துவமனை.

நான் லலிதாவை பார்க்க போயிருந்தேன். அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அழகான அந்த வேண்டி கை விரல்களை தடவியபடி.

“எத்தன தடவை உங்களுக்கு சொல்லுறது வேலை நேரத்துல தொல்ல செய்யதீங்கன்னு”

என் கையுக்குள் இருந்த அவளது கையை வெடுக்கென எடுத்துக்கொண்டாள். அவளது கை ட்ரிப்ஸ் பாட்டில் மாட்டி இருந்த கம்பியில் பட் என்று மோதியது.

நான் பதறிப்போய் அவளது கையை பிடித்து தடவி கொடுத்தேன். வளதண்டு கைகள் வதந்கலாமா ?
“விடுங்க!” என்றாள்

அப்போத்துதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது – வானத்தில் பட் என்று மின்னல் வெட்டுவது போல். காதல் நேரத்தில் நடந்த அந்த நிகழ்வு அவமானமா ? மகிழ்ச்சியா ? என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் அந்த அதிசயம் அதிர்ச்சியும் கொண்டுவந்தது. அந்த அதிசயம் ..

-தொடரும்